வாள் ஒன்றை உடமையில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் 2 அரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர், சான்று பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

