தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுமுல்ல பிரதேசத்தில், உள்நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

