மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பதா?

498 0

தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிர்பந்தம் செய்வது என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம்என்பது போன்றது என கவிஞர் வைரமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை திணிப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

இந்தி என்ற மொழி

தன்னளவில் இயங்குவது

அதன் உரிமை

 

இன்னொரு

தேசிய இனத்தின்மீது

திணிக்கப்படும்போது

அது புல்லுருவிபோல்

உள்ளிருந்து

தாய்மொழியின்

உயிரை உறிஞ்சிவிடும்

 

இந்தியின்

ஆதிக்கம் அதிகமான

மராத்திபோன்ற மொழிகளுக்கு

நேர்ந்த கதி அதுதான்

 

தமிழுக்கும்

அது நேர்ந்துவிடக்கூடாது

என்றுதான்

மும்மொழிக் கொள்கையை

மும்முரமாய் எதிர்க்கிறோம்

 

மும்மொழிக் கொள்கையை

ஏற்றால்தான் நிதிதருவோம்

என்பது

விஷத்தைச் சாப்பிட்டால்தான்

சோறு போடுவோம்

என்பது போன்றது

 

ஏற்றுக்கொள்ள முடியாது

 

தமிழ்நாட்டு அரசின்

நிலைப்பாட்டோடு

தமிழர்கள் கெட்டியாக

ஒட்டி நிற்கிறார்கள்

 

அறிஞர் அண்ணாவும்

உடன் இருக்கிறார்

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் திணிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரன், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது; அதனால் நிதியை தர மறுக்கிறோம் என பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தி இருக்கிறா

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் திணிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரன், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது; அதனால் நிதியை தர மறுக்கிறோம் என பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தி இருக்கிறா

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை மாநிலங்களில் திணிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வித்துறைக்கான நிதியை மத்திய அரசு தராமல் நிலுவையில் வைத்து வருகிறது. இது தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரன், தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுக்கிறது; அதனால் நிதியை தர மறுக்கிறோம் என பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தி இருக்கிறார்.