கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் திங்கட்கிழமை (17) புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை (17) கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

