உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து, 2 வெளிநாட்டுத் துப்பாக்கிகள் , 2 உள்நாட்டுத் துப்பாக்கிகள் , 10 தோட்டாக்கள் மற்றும் 2,500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

