சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

