கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முட்டையின் விலை ரூ.30க்கும் குறைவாகவும், சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.750 முதல் 850 வரையிலும் இருப்பதாகவும் கோழிப்பண்ணை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
ஏனைய சில்லறை விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சியின் விலை ரூ.900 ஆகக் குறைந்துள்ளதாகவும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியின் விலை ரூ.1,000 முதல் 1,100 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோழி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், கால்நடை தீவனமாக மக்காச்சோளத்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

