அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாந்தாலோக்ககம வீதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 900 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.