குருணாகல், மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேதினிகம பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக மீகலேவ பொலிஸார் தெரிவித்தனர்.
மீகலேவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல், மீகலேவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

