நாய்களை தடுக்க விரித்த வலையில் சிக்கிய மகன்

111 0

வீட்டுக்குள் நாய்கள் நுழைவதைத் தடுக்க, சட்டவிரோதமாக தந்தை  பொருத்தியிருந்த மின்சார வயரில் மகன் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக, செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.

நெலும்வெவ – சமகிபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தாயார் தனியாக இருந்தபோது, ​​அவருக்கு உணவு வழங்குவதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோதே, ​​மின்சாரம் தாக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக, பொலிஸார்  தெரிவித்துள்ளனர்