ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சி.பி ரத்நாயக்கவுக்கு கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில்,தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து, சுஜீவ சேனசிங்கவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சி.பி ரத்நாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

