இந்த கொலை சம்பவம் கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட மனைவி நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை (03) சென்றுள்ளார்.
இதன்போது, குறித்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கணவன், தனது மனைவியை கல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் சந்தேக நபரான கணவன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலின் போது மகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மனைவியும் சந்தேக நபரான கணவனும் நீண்ட காலமாக பிரிந்து வாழ்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

