கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆளுநர் அலுவலகத்துக்கு கிடைக்கும் அனைத்து எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் என்பது குறிப்பிடத்தக்கது

