அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாவை சேனாதிராஜா தனது 64 வருட அரசியல் பயணத்தில் அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக கடும் பணியாற்றியுள்ளார்.
யுத்தம் முடிவுறுவதற்கு முன்னரும் பின்னரும் இவரது அரசியல் முன்னெடுப்புகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளதுடன் மக்கள் விடுதலைக்காக போராட்டங்கள் பலவற்றை செய்து சிறைவாசம் அனுபவித்தவர்.
ஜனநாயக நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவரது குரல் அடக்குமுறைக்கு எதிரான மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.
இவரது பிரிவில் துயருறும் அன்னாரது குடும்பத்தாருக்கும் உலக வாழ் தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

