அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோ மீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.
எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

