மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலான அதிகாரிகள் வயலுக்கு சென்று புதிர் எடுத்தனர். உழவுத் தொழிலின் உன்னத தன்மையை இச்சம்பவம் பறைசாற்றுவதாக அமைய பெற்றிருந்தது. உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும்.
இதனை தொடர்ந்து திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் ,பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.







திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தைப்பொங்கல் நிகழ்வானது நேற்று வெள்ளிக்கிழமை (24) மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.