அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

92 0
அநுராதபுரம், கிரானேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்பத்தயாய பகுதியில் புதையல்களுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரானேகம பொலிஸார் தெரிவித்தனர்.

கிரானேகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 48 வயதுடைய ஹல்மில்லேவ, அடியாகல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

தங்க நிற புத்தர் சிலை, 24 இதழ்கள் கொண்ட தங்க தாமரை பூ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  கிரானேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.