பொன்னாலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

81 0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் கஞ்சாவுடன் 54 வயதுடைய நபர் ஒருவர் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கைதான நபரிடமிருந்து 0.92 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.