19 நாட்களில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

74 0
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் 19 நாட்களில் 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 27,166 ஆகும்.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 22,023 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,917 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 7,619 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 7,082 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 6,155 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 4,548 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.