மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

132 0
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன்கிழமை (15) இரவு இனந்தெரியாத நபர்களினால்  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு  தீக்கிரையாக்கப்பட்டுள்ளது..

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.