லிந்துலை நோனாவத்தை ஹில்டனோல் தோட்டத்தை பிறப்பிடமாகவும் தலவாக்கலை மட்டுக்கலை தோட்டத்தில் பணிபுரியும் இராமையா பாரதிராஜா (வயது 40) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

