அண்மையில் கனடாவுக்குப் பயணமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், அங்கு கனேடியப் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியிருந்த நிலையில், குறித்த சந்திப்புகள் தொடர்பிலும், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும் பேசப்பட்ட இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவினருக்கும், கனேடியத் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஒழுங்கமைக்குமாறு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன், உயர்ஸ்தானிகரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

