அளுத்கடை எண் 03 நீதவான் நீதிமன்றத்தில் ‘ஆராச்சி’யாகப் பணியாற்றி வந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
10 கிராம் மற்றும் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர், கஹவத்தை, பனாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொரளை பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தி, கஹவத்தை பகுதியில் உள்ள நபர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது

