வைத்தியராக வேடமணிந்து நகைகளை திருடிய ஆண் தாதி கைது

80 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து  சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்கப் பொருட்களை, வைத்தியர் எனக்கூறி மோசடி செய்து அபகரித்த ஆண் தாதி  ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் பொலன்னறுவையைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கத்தை பறிகொடுத்த பெண்ணின் தாயார் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் நோயாளியை பார்க்க வந்துள்ளனர்.

அதன்போது, ​​நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர் போல் வந்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் தாயின் பதிவுகளை சரிபார்த்து, அவரின் உடல்நிலைக்கு ஏற்ப இரத்தம் வழங்க விரும்புவதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சந்தேக நபர் இந்த இரண்டு பெண்களில் ஒருவரிடமிருந்து இரத்தம் எடுக்க விரும்புவதாகக் கூறி அவர்களை ஒரு வார்டுக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய அனைத்து தங்கப் பொருட்களையும் கழற்றச் சொன்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், தனது தங்கப் பொருட்களை தனது சகோதரிக்கு கொடுக்க விரும்புவதாக அந்தப் பெண் கூறியபோது, ​​சந்தேக நபர் தனது சகோதரி வார்டுக்கு வெளியே இருப்பதாகக் கூறி குரல் பதிவை போலியாக வெளியிட்டுள்ளார்.