மாத்தறை சிறையில் மரம் முறிந்து விழுந்ததில் கைதியொருவர் பலி : 11 கைதிகள் காயம்

119 0

மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் முறிந்து விழுந்ததில் கைதியொருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை  (01) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 12 கைதிகள் காயமடைந்துள்ள நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிதிகம துர்க்கி பகுதியைச்  சேர்ந்த 34 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 34, 35, 39, 41 மற்றும் 52 வயதுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, தெய்யந்தர மற்றும் கல்கமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில் ஏனைய கைதிகள் அனைவரையும் வேறு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் ஒரு பகுதியினர் பாதுகாப்பாக வேறு சிறைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.