“பியுமா” என்பவரை இன்று புதன்கிழமை (01) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

