வாணவேடிக்கை பார்வையிடச் சென்ற தாயும் மகனும் ரயிலில் மோதி படுகாயம்

74 0

காலி மாவட்டத்தில் பெந்தோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி தாயும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய தாயும் 06 வயதுடைய மகனுமே காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காயமடைந்த தாயும் மகனும் நேற்றைய தினம் இரவு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாணவேடிக்கையைப் பார்வையிடச் சென்றிருந்த போது கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்த தாயும் மகனும் பெந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.