மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மூங்கில் படகு ; பொலிஸார் விசாரணை

120 0
மட்டக்களப்பு மாவட்டம் கதிரவளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பால்சேனை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

மூங்கிலால் செய்யப்பட்ட இப்படகானது இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை முதல் கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் கதிரவளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இப்படகில் வந்தவர் யார் என்பது  குறித்த விசாரணையை கதிரவளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.