தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாமல் ஓயா பகுதியில் நேற்று சனிக்கிழமை (28) புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர்.
இச்சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

