காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் இயங்கிவரும் செய்தி நிறுவனத்தின் கார் ஒன்றின் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் மோதல்களினால் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

