கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுல்லவத்த பகுதியில் நேற்று புதன்கிழமை (25) இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும்,சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

