திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடமையேற்ற அருண் ஹேமச்சந்திர

79 0

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அவர், நேற்று (24) மாவட்ட செயலகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான இவர், கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 38,368 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், புதிய அரசாங்கத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று அவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது.