கைது செய்யப்பட்டவர் 34 வயதான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருபவர் எனவும் குஷ் போதைப்பொருளை உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யும் மோசடியில் ஈடுபட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய 01 கிலோ 50 கிராம் குஷ் போதைப்பொருளை உறங்குவதற்குப் பயன்படுத்தும் தலையணையில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 403 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றையதினம் 12.50 மணியளவில் வந்தடைந்துள்ளார்.
மேலும் ,இந்த ரஷ்ய பிரஜை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைமையகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

