பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் 03 சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாபுத்கமுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது சைய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
இவரிடமிருந்து 817 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு மற்றும் கையடக்கத் தொலைப்பேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டர் ஏகநாயகவத்த நீர்கொழும்பு பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
இவரிடமிருந்து 07 கிராம் 530 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், அம்பலந்தோட்டை பொலிஸ் பிரிவில் நோனகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) கைது சைய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அம்பலந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
இவரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி, கந்தானை, அம்பலந்தோட்டை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

