பலரது உயிரைப் பறித்த வாகன விபத்துக்கள்

110 0

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (21) மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெப்பத்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

பேலியகொட – புத்தளம் வீதியில் மாரவில நகரில் கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முன்னால் வந்த முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ, திவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு-வெல்லவாய வீதியின் வளவல பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் டிப்பர் ரக வாகனம் மோதியதில் 64 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, கம்பளை-தொலுவ வீதியில் தவுலம் மோதர என்ற இடத்தில் வீதியின் ஓரமாக நடந்து சென்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பாதசாரி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாரங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்