கிளிநொச்சியில் மோப்ப நாய்களுடன் சோதனை

94 0

கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மோப்ப நாய்களுடன் திடீர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஏ-9 வீதியில், மோப்ப நாய்களை வைத்து வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 25 ஆம் திகதி நத்தார் பண்டிகையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறக்கூடாது என்ற என்ற நோக்கிலும் கிளிநொச்சி பொலிஸார் வீதி சோதனைகளை சனிக்கிழமை (21) முன்னெடுத்திருந்தனர் என தகவல்கள் கிடைத்துள்ளன.