பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, பாதுகாப்பு வழங்கப்படும் என இன்று (17) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போது அவர் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.

