ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுவெவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுல் பொக்குண பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 1,446 லீற்றர் (10 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

