ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பு!

91 0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (16) நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையும் அதே பாதையில் செல்வதாகவும், இந்த முயற்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலையானதுமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும், மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழில் அழிந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.