வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் நாட்டின் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரிப் பத்திரங்களுக்குச் சந்தா செலுத்தியவர்களுக்கு, அந்த முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம், அதன் சர்வதேச பத்திர மறுசீரமைப்பு பயிற்சியின் முடிவை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

