ரணிலின் பரிந்துரை தொடர்பில் அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல்செய்த மனு நிராகரிப்பு

135 0
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபை எடுத்த தீர்மானம் அடிப்படை உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.