வழக்கை விசாரிக்க உத்தரவு

93 0

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோரின் கோரிக்கையை நிராகரித்த நீர்கொழும்பு மாவட்ட நீதவான் லலித் கன்னங்கர, அனைத்து வழக்குகளையும் விசாரிக்குமாறு புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்ட கட்டுவா பிட்டிய குண்டுவெடிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 182 நட்டஈடு வழக்குகள் தொடர்பில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.