ஆயுதமோதலில் ஈடுபட்டுள்ள ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் ஆசாத் சிரியாவிலிருந்து வெளியேறியுள்ளார் அவர் அமைதியான ஆட்சி மாற்றத்திற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என ரஸ்யா தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளில் ரஸ்யா ஈடுபவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு சிரியாவில் உள்ள தனது தளங்கள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன ஆனால் அவற்றிற்கு ஆபத்தில்லை என குறிப்பிட்டுள்ளது.
சிரியாவின் எதிர்தரப்பை சேர்ந்த அனைத்து குழுக்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதியின் நெருங்கிய நேசநாடு ரஸ்யா என குறிப்பிட்டுள்ளது.

