இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி

296 0

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வி அடைந்துள்ளது.

இந்த பிரேரணை குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதன்போது பிரேரணைக்கு எதிராக 436 பேர் வாக்களித்தனர்.

ஆதரவாக 119 பேர் வாக்களித்த அதேநேரம், 22 பேர் சமூகமளிக்கவில்லை.

பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.