கண்டியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஒருவர் கைது

149 0

கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவின்னாபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர்  ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்ட்டுள்ளதாக பொக்காவல பொலிஸார் தெரிவித்தனர்.

பொக்காவல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி, பூஜாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொக்காவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.