வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்று புதன்கிழமை (09) தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வேட்புமனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி தாக்கல் செய்தது.
இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்துகொண்டனர்.

