இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
மாவனெல்லை பொதுச் சுகாதார பரிசோதகர் காரியாலயத்திற்குச் சொந்தமான கெப் வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது, கெப் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில், வைத்திய ஆய்வுக்கூடத்தின் மதில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த காரியாலயத்திற்கு முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செயலிழந்த கெப் வாகனம் ஒன்றை இயக்க முற்படும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

