கருத்துக்கணிப்பின் பிரகாரம் ரணிலுக்கும் சஜித்துக்குமே போட்டி

128 0

இடம்பெற இருக்கும் தேர்தலில் இதுவரை உள்ள கருத்துக்கணிப்பில் ரணிலுக்கும் சஜித்துக்குமே பாேட்டி. மக்கள் விடுதலை முன்னணி மூன்றாம் இடத்தில் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடமபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட கருத்தக்கணிப்புகளில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமே போட்டி இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி என்தான் ஊடக களியாட்டங்களை நடத்தி, மக்களை ஒன்று திரட்டினாலும் மூன்றாவது இடத்திலே இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் ராேஹன விஜேவீரவின் காலத்திலும் இருந்தது.

கடந்த முறை காலிமுகத்திடலை நிரப்புவதாக தெரிவித்து, யாரும் செய்ய முடியாத அளவுக்கு மக்களை திரட்டி காலிமுகத்திடலை நிரப்பினார்கள். ஆனால் தேர்தலில் அவர்களுக்கு நூற்றுக்கு 3வீதமே கிடைத்தது. அதனால் அவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் வருகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.

ஏனெனில் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட மக்கள் விடுதலை முன்னணியின் கலவரமும் காரணமாகும். அவ்வாறான வரலாற்றைக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களின் வரலாறு தெரியாதவர்களே அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். என்றாலும் அவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி இந்த முறை வாக்கு வீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு சவால் இல்லை.

ரணில் விக்ரமசிங்க இன்னும் தேர்தல் பிரசாரத்தை முறையாக ஆரம்பிக்க வில்லை. அவ்வாறு இருந்தே சஜித் பிரேமதாசவுக்கு சமமாக அமைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தால், சஜித் பிரேமதாசவும் எமக்கு சவாலாகாது. நாங்கள் முன்னுக்கு வருவோம் என்றார்.