சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (23) யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மயிலிட்டி கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



