தாக்குதலில் காயமடைந்த மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் 6 மாணவர்களால் வணிக பிரிவு மாணவன் மீது தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்குள்ளான மாணவனின் உடலில் சிறு காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பாக அம்பாறை பொலிஸாரினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

